×

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே மதுபோதையில் ஓட்டிச்சென்ற கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே மதுபோதையில் ஓட்டிச்சென்ற கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி முகுந்தன், சத்யா, அவர்களது ஒன்றரை வயது மகன் மீது கார் மோதியது. கார் மோதியதில் மனைவி சத்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் முகுந்தன், அவரது மகன் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு மீண்டும் வேகமாக சென்ற கார் நூற்பாலையின் வெளியே விளையாடி கொண்டிருந்த குழந்தை மீது மோதியதில் 3 வயது பெண் குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளது.

The post திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே மதுபோதையில் ஓட்டிச்சென்ற கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Uthikuli ,Tirupur district ,Tirupur ,Mukundan ,Uthukuli ,Dinakaran ,
× RELATED கொலை செய்ய முயற்சிப்பதற்காக கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு